சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்த காயத்ரி (29) அஜித்குமார் (24) என்பவருக்கு மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.80,000 கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து, அஜித் வாங்கிய கடனை இரண்டு மாதமாக செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், போன் மூலம் காயத்ரி பணத்தை கட்டுமாறு கேட்டுள்ளார். கோபமடைந்த அஜித் காயத்ரியை நேரில் சந்தித்து இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இதையடுத்து, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, காசிமேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.