நிலைமையை நாங்கள் புரிந்துகொள்கிறோம்: ரோஹித் சர்மா

76பார்த்தது
நிலைமையை நாங்கள் புரிந்துகொள்கிறோம்: ரோஹித் சர்மா
டி20 உலகக் கோப்பைக்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் நிலைமையை புரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். "இதுவரை இங்கு விளையாடியதில்லை. எனவே நிலைமையை நாம் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஜூன் 5-ம் தேதி நடக்கும் முதல் போட்டிக்கு முன் ரிதம் கண்டுபிடிக்க முயற்சிப்போம். மைதானம் மிகவும் அழகாக இருக்கிறது. முதல் முறையாக நியூயார்க்கில் நடைபெறும் உலகக் கோப்பையை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்" என்று ரோஹித் கூறினார்.

தொடர்புடைய செய்தி