நரிக்குறவர்களுக்கு 'கருடன்' பட டிக்கெட் வழங்கிய வட்டாட்சியர்

68பார்த்தது
நரிக்குறவர்களுக்கு 'கருடன்' பட டிக்கெட் வழங்கிய வட்டாட்சியர்
கடலூர் புது தபால் நிலையம் அருகே நியூசினிமா திரையரங்கில் ‘கருடன்’ படத்தை பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் சுத்தமாக வரவில்லை, அவர்களால் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் என தியேட்டர் உரிமையாளர் கூறி அனுமதி மறுத்திருந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கோட்டாச்சியர் அலுவலகத்தில் புகாரளித்த நிலையில், அவர்களை அரசு வாகனத்தில் தியேட்டருக்கு அழைத்து வந்த வட்டாட்சியர் பலராமன், அடுத்த காட்சிகளுக்கு டிக்கெட் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி