மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

55பார்த்தது
மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
சென்னை அயப்பாக்கம் அருகே கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் விட்டு விட்டு மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் உச்சகட்டமாக நேற்று (மே 31) 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அயப்பாக்கம் திருவேற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் எச்சரிக்கையையும் மீறி சுமார் 3 மணி நேரம் போராட்டம் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி