மணி பர்ஸை சுத்தம் செய்ததால் கோடீஸ்வரியான பெண்

67பார்த்தது
மணி பர்ஸை சுத்தம் செய்ததால் கோடீஸ்வரியான பெண்
கனடாவின் கலிடோனியா பகுதியை சேர்ந்த கெரி என்ற பெண்ணுக்கு லாட்டரியில் ரூ. 6 கோடி பரிசு விழுந்துள்ளது. இது குறித்து அவர் கூறும்போது, “என்னுடைய மணி பர்ஸை சுத்தம் செய்த போது அதில் சில பழைய லாட்டரி டிக்கெட்கள் இருந்தது, ஆன்லைன் செயலி மூலம் அதற்கு பரிசு விழுந்ததா என பார்த்த போதே நான் கோடீஸ்வரியானது தெரிந்தது. இதை என் கணவர், குழந்தைகளிடம் சொன்ன போது மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். பரிசு பணம் பல விதத்தில் எனக்கு உதவும்” என்றார்.

தொடர்புடைய செய்தி