அருவியில் குளித்த பெண்.. காணாமல் போன திருமண மோதிரம்

62பார்த்தது
தென்காசி மாவட்டம் குற்றால புலி அருவியில் குளிக்க வந்த பெண் ஒருவர், தனது கையில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க மோதிரத்தை தவறவிட்டார். அது திருமண மோதிரம் என்பதால் குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரனிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் பேரூராட்சி பணியாளர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் சுமார் அரை மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அதனை பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி