நெருங்கும் தேர்தல் முடிவுகள்: புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்!

55பார்த்தது
நெருங்கும் தேர்தல் முடிவுகள்: புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 76,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று 75,655.46 என்ற இதுவரை இல்லாத உயர்வில் வர்த்தகத்தை தொடங்கிய மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 76,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வரத்து அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் இப்புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி