பொது மக்களே உஷார்..! சென்னையில் வறட்சி ஏற்படும் அபாயம்.!

56பார்த்தது
பொது மக்களே உஷார்..! சென்னையில் வறட்சி ஏற்படும் அபாயம்.!
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் கண்ணன் கோட்டை, சோழவரம் ஆகிய ஏரிகளின் நீர் இருப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. இதில் பூண்டி, சோழவரம் ஏரிகள் வறண்டு விடும் அளவிற்கு சென்று விட்டன. எனவே சென்னை மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே பெங்களூரு போன்ற நகரங்கள் வறட்சியால் தவித்து வரும் நிலையில், சென்னையிலும் வறட்சி ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி