சிமெண்ட் களம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

74பார்த்தது
சிமெண்ட் களம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
சிமெண்ட் களம் அமைக்கும் விவசாயிகளுக்கு மதுரை திருப்பரங்குன்றம் வேளாண் பொறியியல் துறை சார்பில் 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும் என வேளாண் உதவி இயக்குநர் சந்திரலேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “மதுரை மாவட்ட சிறு, குறு, எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 60 விழுக்காடும் மற்ற விவசாயிகளுக்கு 50 விழுக்காடும் மானியம் வழங்கப்படும். விருப்பம் உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கள், சிறு குறு விவசாயி சான்று, ஆதார் உள்ளிட்டவைகள் உடன் நேரில் பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.