ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஆதார் அட்டை செல்லாது?

13697பார்த்தது
ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஆதார் அட்டை செல்லாது?
ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்டவற்றை இலவசமாக திருத்தம் செய்துகொள்ள ஜூன் 14ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருப்பதாக ஆதார் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டால் செல்லாது என வெளியாகும் செய்தி உண்மை இல்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டாலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி