வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடுவார்கள்

72பார்த்தது
வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடுவார்கள்
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற பிறகு தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி