தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது தாக்குதல்

60பார்த்தது
தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது தாக்குதல்
இன்று (மே 27) ஒட்டன்சத்திரத்திலிருந்து பழனி சென்ற தனியார் பேருந்தில் இரு பெண்கள் ஏறி அமர்ந்துள்ளனர். அப்போது பழனி செல்லும் பயணிகளுக்கு இ்ருக்கை வழங்குமாறு கூறி இரு பெண்களையும் நடத்துனர் எழுப்பி உள்ளார். இதனால் பெண்களுக்கும் நடத்துனருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பெண்கள் தங்கள் உறவினர் ஒருவருக்கு போனில் தகவல் தெரிவிக்க, விருப்பாச்சி பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது அந்த நபர் பைக்கில் வந்து, பேருந்தை மறித்து நடத்துனரை கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்து நடத்துனர் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.