சிவகங்கை மாவட்டம் லட்சுமிபுரத்தில் டிராக்டர் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதன் அடியில் சிக்கி சத்யா (24) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ரமேஷ் (30) என்பவர் தனது டிராக்டரில், மனைவி மற்றும் குழந்தையை அமர வைத்து உழுது கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் அவரது கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது தனது மடியில் அமர வைத்திருந்த குழந்தை சாஷிகாவை (2) தூக்கிக்கொண்டு அவர் குதித்ததால் இருவரும் உயிர் தப்பியுள்ளனர். ஆனால் அவரது மனைவி டிராக்டர் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.