திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை

66பார்த்தது
திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி சரஸ்வதி (21). இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்கள் முன்பு குடும்ப முறைப்படி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
ஜெய்கணேஷ் வீட்டில் இருந்து சரஸ்வதி கல்லூரி பயின்று வந்தார். இந்த நிலையில் திருமணமான மூன்று மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காடாம்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான மூன்று மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி