திராட்சை பழங்கள் சாலையோரங்களிலும், பழக்கடைகளிலும் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. பழங்களை சுத்தம் செய்ய ரசாயனங்களில் கலக்கப்படுவதாக பல இடங்களில் புகார்கள் வருகிறது. இப்படி கலக்கப்படும் திராட்சைகளை சாப்பிடுவதால் பொதுமக்களுக்கு தொண்டை வலி, வயிறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளது. ரசாயனம் கலந்த திராட்சை பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் ½ மணி நேரம் ஊற வைத்து கழுவிய பின்னர் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.