ஆசிரியர் அடித்ததில் கண்பார்வை இழந்த மாணவி

593பார்த்தது
ஆசிரியர் அடித்ததில் கண்பார்வை இழந்த மாணவி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவ் ஆர் குமார். இவரது மகள் கங்கையம்மன் (10) தலைவாசல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி தலைமை ஆசிரியர் திருமுருகவேள் பாடம் நடத்தியுள்ளார். பின் மாணவிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது மாணவி கங்கையம்மாளுக்கு அருகிலிருந்த மாணவியை அடிக்க குச்சியை எறிந்துள்ளார். அது கங்கையம்மன் கண்ணில் விழுந்துள்ளது. இதனால் வலியால் அலறித்துடித்துள்ளார். இதனால் மாணவி 95% கண்பார்வையை இழந்துள்ளார். இந்நிலையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர்கள் ஆத்தூர் டிஎஸ்பியிடம் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி