தடுப்பூசி போடாதவர்களுக்குத்தான் ரிஸ்க் அதிகம்.!

66பார்த்தது
தடுப்பூசி போடாதவர்களுக்குத்தான் ரிஸ்க் அதிகம்.!
சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி கூறும் பொழுது, “தடுப்பூசியால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால் பக்கவிளைவுகள் 0.1%க்கும் கீழ் தான் இருக்கிறது. இன்னும் கொரோனா தொற்று முழுமையாக முடியவில்லை. கொரோனா நோயாளிகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். வைரஸ் நம்முடன் தான் இருக்கிறது. தடுப்பூசி போடாதவர்களை கொரோனா தாக்கினால், நிமோனியா ஏற்பட்டு உடனடி உயிரிழப்பு கூட ஏற்படலாம். அவர்களுக்கு தான் ரிஸ்க் அதிகம். எனவே தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களை பரப்பாதீர்கள். நம்பாதீர்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி