அதிமுக தொண்டர்களின் போஸ்டரால் பரபரப்பு!

55பார்த்தது
அதிமுக தொண்டர்களின் போஸ்டரால் பரபரப்பு!
சசிகலாவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில், சிவகங்கையை சேர்ந்த அதிமுக தொண்டர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது என்பதை எண்ணி கழகத்தின் உன்மை தொண்டர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுகின்றோம். சிதறி கிடக்கும் கழக தொண்டர்களை ஒன்றுபடுத்துவோம். அதிமுகவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்ல உறுதியேற்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி