ஆண்டுதோறும் ஜூன் 7ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும். உணவுப்பழக்க நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு, மேலாண்மை நுட்பங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகில் ஆண்டுதோறும் 60 கோடி பேர் பாதுகாப்பற்ற உணவை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.