கர்நாடகா: கோலார் மாவட்டம் அவனி கிராமத்தை சேர்ந்த எல்லப்பா என்ற விவசாயிக்கு சொந்தமான பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகள், நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இதனால் ஆச்சர்யமடைந்த எல்லப்பா கால்நடை மருத்துவரை அழைத்து கன்றுக்குட்டியை பரிசோதனை செய்ததில், குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த கன்றுக்குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லப்பா வீட்டுக்கு படையெடுத்து வருகிறது.