ஆட்டம் ரத்து.. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா

57பார்த்தது
ஆட்டம் ரத்து.. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா
குஜராத்தின் அஹமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டி நேற்று (மே 13) மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளும் தலா 1 புள்ளிகளைப் பெற்றன. இந்த முடிவால் கொல்கத்தா பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. குஜராத் போட்டியில் இருந்து வெளியேறியது. குஜராத் தற்போது 11 புள்ளிகளைக் கொண்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் 13 புள்ளிகள்தான். இதன் மூலம் லீக் சுற்றுடன் வெளியேறும் 3வது அணியாக குஜராத் அதிகாரப்பூர்வமாக மாறியது.

தொடர்புடைய செய்தி