உடல் நலம் குன்றிய யானைக்கு வனத்துறை தீவிர சிகிச்சை

57பார்த்தது
ஈரோடு: கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட எக்கத்தூர், கச்சப்பள்ளம் சரகத்தில் கடம்பூர் வனத்துறையினர் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று வயது முதிர்வு காரணமாக படுத்த நிலையில் இருந்துள்ளது. தொடர்ந்து யானைக்கு வன கால்நடை மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. யானையால் எழுந்து நடமாட முடியாத நிலை உள்ளதால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடம்பூர் வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி