சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினருடன் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை பெற்று வந்த பிரேமலதாவை வரவேற்க வந்தபோது தேமுதிகவினர், காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வாகனப் பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்க, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விருதை பெற்றுக் கொண்டார்.