ஸ்கூட்டியின் சீட்டிற்குள் நுழைந்த மண்ணுளி பாம்பு!

70பார்த்தது
ஸ்கூட்டியின் சீட்டிற்குள் நுழைந்த மண்ணுளி பாம்பு!
மழைக்காலம் என்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில், கோவை சூலூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரின் சீட்டிற்கு அடியில் பதுங்கியிருந்த இரட்டை தலை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது. தினேஷ் என்பவர் பெட்ரோல் அளவை சரிபார்ப்பதற்காக சீட்டை தூக்கிய போது பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்தவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து பாம்பு பிடி வீரரான சஜீஸ் பாம்பை பிடித்து மதுக்கரை வனச்சரக பகுதிக்கு எடுத்துச் சென்றார்.

தொடர்புடைய செய்தி