திருநங்கையுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர்

67பார்த்தது
திருநங்கையுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர்
தஞ்சாவூர் மனோஜிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் திருநங்கை சஹானா (எ) பிரபாகரன் (35). இவர் நேற்று இரவு (மே 23)கும்பகோணம் பகுதியை சேர்ந்த குமரேசன் (38) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருவையாறில் இருந்து தஞ்சை வந்துள்ளார். அப்போது சுந்தர மூர்த்தி என்பவர் தனது மனைவியுடன் திருவையாறு நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது மணக்கரம்பை டாஸ்மாக் அருகே இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சஹானா மற்றும் குமரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி