பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை கோவையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சாமிநாதன், பாலாஜி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் 3வது நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.