“பொது இடத்தில் ஆடு, மாடு பலியிடலாம்”? - நீதிமன்றம் உத்தரவு

77பார்த்தது
“பொது இடத்தில் ஆடு, மாடு பலியிடலாம்”? - நீதிமன்றம் உத்தரவு
பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் ஆடு, மாடுகளை, மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் பலியிட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இது குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு மற்றும் மாடுகளை பலியிட தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துவிட்டது. ஆடு, மாடுகளை பலியிடும் சமூகத்தினரின் வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி