டெலிவரி பாய் மீது ஏறிய கார்.. சம்பவ இடத்திலேயே பலி

54பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கோல்ஃப் மைதானம் அருகே டெலிவரி செய்யும் வேலை பார்க்கும் மோகன் சவுகான் (41) என்பவர் நேற்று (ஜூன் 18) இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். அப்போது, அவரது பின்னால் வந்த கார் ஒன்று மோகன் மீது ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, இச்சம்வம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மோகனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி