பாம்பிடம் இருந்து பார்வையற்ற உரிமையாளரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்

62பார்த்தது
பாம்பிடம் இருந்து பார்வையற்ற உரிமையாளரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்
கேரளாவின் கோட்டயம் அருகே நாகப்பாம்பிடம் இருந்து பார்வையற்ற தனது உரிமையாளரை தைரியமாக பாதுகாத்து ஹீரோவாக உருவெடுத்துள்ளது கிட்டு என்ற விசுவாசமான செல்ல நாய். பொன்குன்னத்தில் குடும்பத்துடன் வசிக்கும் ஸ்ரீகுமாரின் (63) வீட்டில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிறவியிலேயே பார்வையற்றவரான ஸ்ரீகுமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டு சமையலறை கதவு அருகே நாகப்பாம்பிடம் சிக்கியுள்ளார். உரிமையாளருக்கு ஏற்படவிருந்த ஆபத்தை தொடர்ந்து நாய் குரைத்துக் கொண்டே இருந்தது.
ஸ்ரீகுமாரால் பாம்பை பார்க்க முடியாவிட்டாலும், வரவிருக்கும் அச்சுறுத்தலை கண்டு பின்வாங்கியுள்ளார்.

அப்போது பாம்பை உள்ளே செல்ல விடாமல் தனது உரிமையாளரை பாதுகாத்து நாய் முன்னே நின்றது. இந்த சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான புருஷோத்தமன் ஓடி வந்து பார்த்துள்ளார். நாகத்துடன் நாய் தைரியமாக சண்டையிட்ட நிலையில், இறுதியில் அதை புருஷோத்தமன் உள்ளிட்டோர் அடித்துக் கொன்றனர். சம்பவத்தின் போது வீட்டில் இல்லாத ஸ்ரீகுமாரின் மனைவி ரமாதேவி, நாய் கிட்டு மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி