திமுக எம்.பி தடுத்து நிறுத்தம் - திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்

53பார்த்தது
திமுக எம்.பி தடுத்து நிறுத்தம் - திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்
திமுக எம்பி அப்துல்லா சிஐஎஸ்எஃப் வீரர்களால் தடுத்து நிறத்தப்பட்டதற்கு திரிணாமூல் காங்கிரஸ் எம்பி சாக்கேட் கோகுலே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நாடாளுமன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களால் திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே நாடாளுமன்றம் பாதுகாப்பு சிஐஎஸ்எஃப்-க்கு மாற்றப்பட்டதா? மக்கள் பிரதிநிதியான மாநிலங்களவை உறுப்பினரை ஏன் நாடாளுமன்றம் செல்கிறீர்கள் எனக் கேட்டது கண்டனத்துக்குரியது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி