கடையில் மோதி விபத்துக்குள்ளான கார்.! CCTV காட்சிகள்

46062பார்த்தது
கோவை கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் தமிழ் புத்தாண்டான நேற்று காரில் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சூலூர் அரசு மருத்துவமனை எதிரே வந்தபோது, ஜெகதீஸ்வரன் தூங்கிவிட்டதாக தெரியவருகிறது. இதனால் காரை இயக்க முடியாமல் அருகில் இருந்த கடையில் மோதி காரை நிறுத்தினார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். மோதிய வேகத்தில் காரின் முன் பகுதியில் தீப்பிடித்தது.அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி