பக்தர்களை கட்டையால் துரத்தி துரத்தி அடித்த பூசாரிகள்

83பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள சித்பீத் ஸ்ரீ தக்ஷின் காளி கோயிலில் நேற்று (ஏப்ரல் 14) பக்தர்களுக்கும், கோவில் பூசாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் அது கைகலப்பாக மாறத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பக்தர்கள் மீது கோவில் பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் கட்டையை எடுத்து அடிக்கத் தொடங்கினர். பயந்து ஓடிய பக்தர்களை துரத்திச் சென்று பூசாரிகள் தடியடி நடத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.