ஆம்ஸ்ட்ராங் மட்டும் அல்ல, மற்றொருவரையும் தீர்த்துக்கட்ட சதி

84பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் மட்டும் அல்ல, மற்றொருவரையும் தீர்த்துக்கட்ட சதி
ஆம்ஸ்ட்ராங்கிற்குப் பயந்து பதுங்கியிருந்தாக மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்னை பாலு உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பொன்னை பாலு, ரவுடி ஜெயபாலுவையும் ஆம்ஸ்ட்ராங்கையும் ஒரே நேரத்தில் கொலை செய்ய திட்டமிட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி