போலீஸை கார் ஏற்றிக் கொன்ற கொடூரம்

64பார்த்தது
போலீஸை கார் ஏற்றிக் கொன்ற கொடூரம்
டெல்லியில் சந்தீப் என்ற காவலர் நேற்று (செப் 9) இரவு சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமா கார் ஒன்று வந்துள்ளது. அதனை மடக்கி பிடித்த சந்தீப் மெதுவாகப்போக சொல்லி எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் சந்தீப்பை, காரால் இடித்து இழுத்து சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தீப் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி