இந்தியாவை 10 ஆண்டு காலம் சிறப்பாக வழிநடத்திய மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் மக்களவைத் தேர்தல் என்பதால்
பாஜக தலைமையில்தான் இங்கே கூட்டணி அமையும் என அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எங்கள் அணிக்கு சாதகமான தீர்ப்பு வரும், கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.