ரயில்கள் நீட்டிப்பு: பயணிகள் நலச் சங்கம் வரவேற்பு

56பார்த்தது
ரயில்கள் நீட்டிப்பு: பயணிகள் நலச் சங்கம் வரவேற்பு
விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இயக்கப்படும் ரயில்கள், திருவாரூா் வரை நீட்டிக்கப்பட்டதற்கு, மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மயிலாடுதுறை, திருச்சியிலிருந்து வரும் ரயில்கள் திருவாரூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை மே 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

அதன்படி, விழுப்புரத்தில் மாலை 6. 25-க்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறை, பேரளம், பூந்தோட்டம், நன்னிலம் வழியாக இரவு 10. 45 மணிக்கு திருவாரூா் வந்தடைந்து, மறுநாள் காலை (மே 3) 5. 10 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்பட்டு, காலை 9. 15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

மே 2-ஆம் தேதி இரவு 8. 25-க்கு திருச்சியிலிருந்து புறப்படும் ரயில், தஞ்சாவூா், சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி வழியாக திருவாரூருக்கு இரவு 11. 05-க்கு வந்தடைந்து, மறுநாள் காலை 4. 45-க்கு புறப்பட்டு. காலை 7 மணிக்கு திருச்சியை அடையும்.

மே 3-ஆம் தேதி அகஸ்தியம்பள்ளியில் காலை 5. 55-க்கு புறப்பட்டு வேதாரண்யம், தோப்புத்துறை, கரியாப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மணலி, அம்மனூா், திருநெல்லிக்காவல் வழியாக திருவாரூருக்கு காலை 7. 55 மணிக்கு வந்தடையும் ரயில், இரவு 7. 35 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்பட்டு, அகஸ்தியம்பள்ளிக்கு இரவு 9. 30-க்கு சென்றடையும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி