திருக்காட்டுப்பள்ளியில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்கள்.

1084பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்கள். திருக்காட்டுப்பள்ளி பூதலூர் சாலையில் கேஷ் கம்பெனி பின்புறம் உள்ள வயலின் இருந்த மின் கம்பங்களில் இருந்த மின் கம்பிகள் அருகிலுள்ள பனை மரத்தில் உள்ள நுங்குகளை வெட்டும் போது அவை எதிர்பாராத விதமாக மின்கம்பங்களில் விழுந்து மின் வயர்கள் மற்றும் மின் கம்பம் ஆகியவை சாய்ந்து கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த வயல்களில் கலை பறித்துக் கொண்டிருந்த பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக அந்த மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என்றும், இதுபோல அசாதாரணமாக மின் கம்பங்கள் அருகில் உள்ள மரங்களில் ஏறி வெட்டுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி