திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் குத்து விளக்கு பூஜை

57பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடந்தது. திருக்காட்டுப்பள்ளியில் சௌந்தர்நாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் உலக நன்மை வேண்டியும், தோஷங்கள் நீங்கிடவும், மாங்கல்ய பாக்கியம் கைகூடவும், குழந்தை பேரு பெற்றிடவும், லட்சுமி கடாட்சம், மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திடவும், வீட்டில் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறைந்திட வேண்டியும் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு இருந்தனர்.

தொடர்புடைய செய்தி