திருவையாறு அருகே அரசு மதுபான பாட்டில் விற்றவர் கைது
திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில்தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பூவலிங்கம்(51) கண்டியூரில் ஒரு ஹோட்டல் முன்பு அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவையாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 180 மிலி கொள்ளவு கொண்ட கோல்டன் சாய்ஸ் அரசு மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது அவரிடம் இருந்த இரண்டு மது பாட்டிகள், ரொக்கம் ரூ 900 ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்தனர்.