தஞ்சை: ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இலவச பெட்ரோல்!

3272பார்த்தது
ஹெல்மெட் போட்டு வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பவர் பெட்ரோல் இலவசமாக பெறும் கூப்பனை தஞ்சை நகர போக்குவரத்து காவலதுறையினர் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வழங்கினர்.

ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், தஞ்சையில் போக்குவரத்து காவல்துறை தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தஞ்சை அண்ணா சாலையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வழக்கமாக ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அபாராதம் விதிப்பார்கள். ஆனால், நேற்று ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை காவல்துறையினர் மறித்து நிறுத்தியதால் நாம் தான் ஹெல்மெட் போட்டு இருக்கோமே என எண்ணி ஒருவித பதட்டமும் அச்சமும் அடைந்து வாகனத்தை நிறுத்தினர். அங்கு பேப்பர், பேனாவுடன் வந்த ஒரு பெண் வண்டி எண், பெயர் கேட்டு குறித்து கொண்டார்.

குழப்பத்தின் உச்சத்திற்கே சென்ற வாகன ஓட்டிகளிடம் நீங்கள் ஹெல்மெட் அணிந்து வந்ததால் ஒரு லிட்டர் பவர் பெட்ரோல் விலையில்லாமல் என கூறி கூப்பனை வழங்கிய காவல் துறையினர் போலீஸ்காக போடாதீங்க உங்களுக்காக ஹெல்மெட் போடுங்கனு சொல்லி 365 நாட்களும் ஒரு லிட்டர் பவர் பெட்ரோல் விலை இல்லாமல் வழங்கப்படும் என அறிவித்தனர்.

தொடர்புடைய செய்தி