கூத்தனூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

56பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அடுத்த கூத்தனூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீமஹா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்றிரவு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பத்து நாட்கள் விரதம் இருந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்குதல் எனும் தீமிதி நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இந்த தீமிதி திருவிழாவை காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி