விவசாயியை வழிமறித்து தாக்குதல்: 5 பேர் கைது

1901பார்த்தது
விவசாயியை வழிமறித்து தாக்குதல்: 5 பேர் கைது
ஒரத்தநாடு தாலுகா, பாப்பாநாடு அருகே திருமங்கலக்கோட்டை கிழக்கு கீழ காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராசு (68) விவசாயி. அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. மாவட்ட பெண் கவுன்சிலரின் கணவர் கதிரவன்(48), ஆகிய இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் 'கோவிந்தராசு பாப்பாநாட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு பைக்கில் சென்றபோது, ஒரு கார் மற்றும் இரண்டு பைக்குகளில் வந்த ஒரு கும்பல், கொத்தையகாடு என்ற இடத்தில் கோவிந்தராஜை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் கோவிந்தராஜ் பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து கோவிந்தராஜின் மனைவி இளவரசி பாப்பாநாடு காவல்நிலையத்தில் தி.மு.க., மாவட்ட பெண் கவுன்சிலரின் கணவர் கதிரவன் என்பவர் கூலிப்படை வைத்து என் கணவரை கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்று விட்டார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண் நடும் என புகார் அளித்தார்.

இதன்பேரில் பாப்பநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கதிரவன் அவரது கூட்டாளிகளான காசநாடுகோவிலுார் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் முத்துக்குமார்(42), சோழபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த சேகர் மகன் சதீஸ்குமார்(34), சுந்தரராஜ் மகன் சுதாகர்(42), இவரது சகோதரர் அசோக்(34) ஆகிய 5 பேரை கைது செய்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் நேர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி