தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை அருகே நேற்று முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் மற்றும் போலீசார் அங்கு சென்று பிணமாக கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் (வயது 73) என்பது தெரியவந்தது.
இது குறித்து அவர்களுடைய உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் முதியவரின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்