ஜம்மு காஷ்மீர் ஹரியானா பேரவை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும்

79பார்த்தது
ஜம்மு காஷ்மீர் ஹரியானா பேரவை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய பாஜக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுடன் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கிவிட்டது. பாஜகவின் கொள்கைகளை பிடிக்காமல் கூட்டணி கட்சியினர் மாற்றுக் கருத்துகளை கூறி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டத் துக்கு செவி கொடுக்காமல் பாஜக அரசு செயல்பட்டதால் இந்த இரு மாநிலங்களிலும் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும்.
பிரதமர் மோடி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறார். இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக்
கொண்டே இருக்கிறது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறார்.
கல்வி, மருத்துவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும். சாதி வாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தினால்தான், பின்தங்கிய வகுப்பினரின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் உரிய ஒதுக்கீடுகளை வழங்க முடியும். மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த பாலியல் கொலையை பாஜக அரசியலாக்கி வருகிறது. டெல்லியில் பளுதூக்கும் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போராட்டம் நடத்தியவர்களை பாஜகவினர் கண்டு
கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி