434 ஏரி மற்றும் குளங்களில் வண்டல் மண், களிமண் எடுக்கலாம்

63பார்த்தது
434 ஏரி மற்றும் குளங்களில் வண்டல் மண், களிமண் எடுக்கலாம்
தஞ்சாவூர் மாவட்டஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,  

"தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளில் இருந்து மண் எடுக்க www. tnesevai. tn. gov. in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அவர்கள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ளலாம்.

விவசாய பயன்பாட்டிற்காக விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது நிலம் தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவு செய்யவேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருவாய் துறையினரால் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய வட்டாட்சியர் அனுமதி வழங்குவார்.  


மேலும், மண்பாண்டத் தொழில் பயன்பாட்டிற்கு விண்ணப்பம் செய்யும் மண்பாண்டத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலின் உண்மைத்தன்மை சான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிர்வாக அலுவலரால் சான்று அளிக்கப்பட வேண்டும்.

வண்டல் மண், களிமண் எடுக்க வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரங்களைwww. tnesevai. tn. gov. in என்ற இணையதளத்தில் 

தெரிந்து கொள்ளலாம். மேலும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலும் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி