போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
குடந்தையில் தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக
ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 104
மாத டி. ஏ. உயர்வையும், 2022 டிசம்பர் முதல் வழங்க
வேண்டிய பணப்பலன்களையும் உடனடியாக வழங்க
வேண்டும், வாரிசு வேலை வழங்கவும். புதிய ஓய்வூ
தியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூ
தியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் செயலாளர்கள்
சக்திவேல், அண்ணாதுரை, துணைத்தலைவர் சாமி
துரை, நிர்வாகி ராஜகோபால் மற்றும் பலர் கலந்து
கொண்டனர். துணைசசெயலாளர் சுப்பிரமணியன்
நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி