சமையலின் போது தீவிபத்து சிகிச்சை பலனின்றி செவிலியர் சாவு

80பார்த்தது
சமையலின் போது தீவிபத்து சிகிச்சை பலனின்றி செவிலியர் சாவு
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் மகள் பவதாரணி (22). இவர் நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். தமிழ் வருட பிறப்புக்காக வீட்டுக்கு வந்துள்ள பவதாரணி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்ணெண்ணை கேன் தவறி எரிந்து கொண்டு இருந்த அடுப்பு மீது விழுந்தபோது குபீரென ஏற்பட்ட தீ பவதாரணி உடையில் பட்டு எரிந்ததில் அவர் உடல் முழுவதுமாக தீயில் எரிந்தது.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் வந்து அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் காண்பித்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது பற்றி மதுக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்கின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி