பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தல் அமைத்து உதவிடுவீர் எம்எல்ஏ

83பார்த்தது
பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தல் அமைத்து உதவிடுவீர் எம்எல்ஏ
தி. மு. கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான  மு. க. ஸ்டாலின் அறிவுரைக்கு ஏற்ப, தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் நீர், மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு உதவிடுமாறு, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மே. 1-ஆம் தேதி முதல் கடும் வெயிலும், மே 4-இல் இருந்து கத்தரி வெயிலும் ஆரம்பிக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. கடும் வெயிலில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை சமாளிக்கும் வகையில் ஆங்காங்கே பொதுமக்கள் கூடும் இடங்களில் நீர், மோர் பந்தல் கழக அமைப்புகளின் சார்பில் அமைத்து பொதுமக்களுக்கு உதவிடுமாறு வேண்டுகிறேன்.

தஞ்சை தெற்கு மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னணியினர் ஆங்காங்கே நீர், மோர் பந்தல் அமைத்து மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுகிறேன்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி