வேப்பங்குளம் பாலமுருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா

74பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே வேப்பங்குளத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடந்தது. இதை முன் னிட்டு முத்துமாரியம்மன் கோவில் அருகில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து பாலமுருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் மாவிளக்கு போடுதல் மற்றும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை வேப்பங்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி