அ. தி. மு. க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்

62பார்த்தது
அ. தி. மு. க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்
பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட அ. தி. மு. க. செயலாளரும், முன்னாள் எம். எல். ஏ. வுமான சி. வி. சேகர் தலைமை தாங்கினார். எம். ஜி. ஆர். இளைஞர் அணிசார்பில் எம். ஜி. ஆர்இளைஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான ஜவஹர் பாபு ஏற்பாட்டின் பேரில் கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தலை சி. வி. சேகர் திறந்து வைத்தார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், நகர மன்ற து உறுப்பினர்கள், அ. தி. மு. க. வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி